tag:blogger.com,1999:blog-4081635942077636046.post4140104052642628826..comments2023-03-17T10:48:11.945-07:00Comments on தமிழ் நாட்டுச் சுதந்திரப் போராட்ட தியாகிகள்: ப. ஜீவானந்தம்Thanjavooraanhttp://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4081635942077636046.post-41673388505397641852010-10-19T22:22:15.153-07:002010-10-19T22:22:15.153-07:00சிங்கத்தை எந்தக் காட்டில் விட்டாலும் அது சிங்கம் த...சிங்கத்தை எந்தக் காட்டில் விட்டாலும் அது சிங்கம் தான்.<br />அதன் சீற்றம் மாறாது.<br />அதைப் போலத்தான் இந்த ஜீவாவும்.<br /><br />நான் அதிகம் விரும்பும் தலைவர்.<br />கம்பனையும், மஹாகவியையும்,இந்த ஜீவாவையும் மான சீகமாக நேசிக்கிறேன், போற்றுகிறேன், வணங்குகிறேன்.......<br />சிறுவயதிலே நான் "ஜீவபாரதி" அன்று புனைப்பெயர் கொண்டு தமிழில் கிறுக்க ஆரம்பித்தேன். அற்புத மனிதர்.<br />எங்கள் ஊர் ஜீவா மன்றத்தின் சார்பாக நடந்த இலக்கியக் கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன், அந்தக் கூட்டத்தில் பேசிய குன்றக்குடி அடிகளார் (முன்னவர்) அவர்களுக்கு, பாரதி மன்றம் என்ற ஒரு அமைப்பை எனது நண்பர்களோடு ஏற்படுத்திக் கொண்டு அதன் சார்பாக அவருக்குப் பொன் ஆடைப் போர்த்தி மகிழ்ந்திருக்கிறேன்.<br /><br />வானொலியில் ஒளிபரப்பும் கம்பன் விழா நிகழ்சிகளை கேட்கத் தவறியதில்லை. டி.கே.சி, ஜீவா இவர்களின் மீசையைப் பாருங்கள் கம்பனாகவே தெரியும். காரணம் கம்பனையே இவர்களைக் கொடு தான் வரைந்திருப்பார்கள் போலும். தமிழகத்தில் கம்பனை வளர்த்தவர்களில் இவர்களுக்குத் தான் அதிக பங்கு.<br /><br />////அதற்கு ஜீவா இந்த தேசம்தான் எனது சொத்து என்று பதில் கூறினாராம். இந்தப் பதிலைக் கேட்டு வியந்துபோன காந்திஜி இல்லையில்லை நீங்கள்தான் இந்த நாட்டின் சொத்து என்றாராம்////<br />வேறுயாரும் இப்படி மகாத்மாவிடம் பாராட்டுப் பெற்றிருக்க மாட்டார்கள்..<br />/////இவர் பல தொழிற்சங்கங்களுக்குத் தலைமை ஏற்றுப் பல போராட்டங்களை நடத்தினார். இவரது வளர்ச்சியைக் கண்டோ, அல்லது இவருக்குத் தொழிலாளர் மத்தியில் இருந்த செல்வாக்கு காரணமாகவோ, அல்லது இவரது போக்கு காங்கிரசுக்கு பாதகமாக இருக்குமென்றோ தெரியவில்லை காங்கிரஸ் கட்சி இவரை 1939 ஆகஸ்ட்டில் கட்சியை விட்டு நீக்கியது. உடனே ஜீவா தனது அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் பதவியையும் தூக்கி எறிந்தார்./////<br />இதைப் போன்றத் தவறுகள் தான் தேசநலனுக்காக ஆரம்பித்த இயக்கம் முதலாளிகளின் கூட்டமாக மாறி இன்று அதன் பலனை தமிழகத்திலே அனுபவித்துக் கொண்டு இருக்கிறது.<br /><br />/////இறங்கி உள்ளே போனார் காமராஜ். அங்கு ஒரு கிழிந்த பாயில் படுத்திருந்தார் நாடறிந்த தலைவர் ஜீவா. காமராஜ் மனம் கலங்கியது. சரி நான் போகும் நிகழ்ச்சிக்கு நீங்களும் வாருங்கள் போகலாம் என்றார். சிறிது நேரம் ஆகுமே பரவாயில்லையா என்றார் ஜீவா. காமராஜ் காத்திருந்தார். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. ஜீவா வரக்கணோம். என்னவென்று பார்த்தால் அவருக்கென்று இருந்த ஒரே வேட்டியை துவைத்து காயவைத்துக் கொண்டிருந்தார். பின்னர் அந்த நிகழ்ச்சிக்கு இருவரும் சென்றார்கள்//////<br /><br />மனம் வலிக்கிறது..... படிக்கும் போது கண்கள் கலங்க வைத்த நிகழ்வு..... யார் இவர்கள்? இப்போது எங்கேப் போனார்கள்...... இருப்பார்கள் ஆனால் அவர்கள் இறந்தப் பின்புதான் தெரிய வருவார்கள் போலும்.<br /><br />இவரைப் போன்ற தியாகிகளோடு பழகிய உங்களோடு நான் பழகுகிறேன், நீங்கள் எழுதிய கட்டுரைகளைப் படிக்கிறேன் எனும்போது நான் பேருவகை அடைகிறேன்.<br /><br />நன்றிகள் ஐயா!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081635942077636046.post-14468591990003869452010-08-28T14:34:55.299-07:002010-08-28T14:34:55.299-07:00இலக்கிய ஆர்வலர் என்பதைமட்டும் சொல்லி நிறுத்திவிட்ட...இலக்கிய ஆர்வலர் என்பதைமட்டும் சொல்லி நிறுத்திவிட்டீர்கள்.ஜீவா பெரிய பாரதி பக்தர்.கம்பனில் ஆழ்ந்த புலமை உடையவர் அல்லவா?kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.com