Followers

Sunday, July 31, 2011

சுதந்திர தின வாழ்த்து


இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்!! வந்தேமாதரம்!!!

64ஆம் ஆண்டு சுதந்திர நாளில் ஓர் உறுதிமொழி ஏற்போம். ஊழலை ஒழிப்போம். ஊழல் வாதிகளை உதறித் தள்ளுவோம். உலகத்து நாடுகளுக்குத் தலைமை ஏற்போம். வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு. வந்தேமாதரம்!

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்; கருகத் திருவுளமோ?

எண்ணமெலாம் நெய்யாக எம் உயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ?

ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?

தர்மமே வெல்லும் எனும் சான்றோர் சொல் பொய்யாமோ?
கர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ?

நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய்!
வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ?

பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்?
பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே?

நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமை யாம் கேட்டால்
எம்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவோ?

இன்று புதிதாய் இரக்கின்றோமோ? முன்னோர்
அன்று கொடு வழ்ந்த அருமையெலாம் ஓராயோ?

நீயும் அறமும் நிலைத்திருத்தல் மெய்யானால்
ஓயும் முன்னர் எங்களுக்கிவ் ஓர் வரம் நீ நல்குதியே.
***

இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப் பட்டாலும்
பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுத் திழிவு உற்றாலும்
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட்டாலும்
சுதந்திர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கிலேனே.
***

-- மகாகவி சுப்பிரமணிய பாரதியார

No comments:

Post a Comment

Please give your comments here